Thalapathi

Rajinikanth Thalapathi

ராக்கம்மா கைய தட்டு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு அடி
ராக்கோழி மேளங்
கொட்டு

குழு : ஜக ஜக ஜக ஜா

ஆண் : இந்த ராசாவின்
நெஞ்ச தொட்டு

குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக

பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலை கட்டு அடி
ராசாத்தி தோளில் இட்டு

குழு : ஜக ஜக ஜக ஜா

பெண் : தினம் ராவெல்லாம்
தாளந்தட்டு

குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக

ஆண் : ஒரு கட்டுக்காவல்
இது ஒத்துக்காது என்ன
கட்டிப்போட ஒரு சூரன்
ஏது

குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் : ஹாஹா ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு

ஆண் : தேரிழுக்கும்
நாளும் தெப்பம் விடும்
நாளும் மச்சான் இங்கே
அது ஏன் கூறு

பெண் : அட ஊருசனம்
யாவும் ஒத்துமையா
சேரும் வம்பும் தும்பும்
இல்ல நீ பாரு

ஆண் : மத்தளச் சத்தம்
எட்டு ஊருதான் எட்டணும்
தம்பி அடி ஜோராக வைக்கிற
பானம் அந்த வானையே
தாக்கணும் தம்பி விடு
நேராக அட தம்பாட்டம்
தாராதான் தட்டிப்பாடு

ஆண் : ராக்கம்மா
முத்தம் சிந்து

குழு : ஜக ஜக ஜக ஜா

ஆண் : பனி முத்துப்போல்
நித்தம் வந்து

குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக

பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு

குழு : ஜக ஜக ஜக ஜா

பெண் : இங்கு மேயாதே
துள்ளிக்கிட்டு

குழு : ஜக ஜக ஜக
ஜக ஜக

ஆண் : அட பக்கம் நீ
வா ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா
என்ன அக்க போரா

குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் : ஹே ஹே ஹே
ஹே ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு

பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு இங்கு
மேயாதே துள்ளிக்கிட்டு

ஆண் : வாசலுக்கு வாசல்
வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி
விளக்கேத்து

பெண் : அட தட்டிருட்டு
போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும்
பூ பூத்து

ஆண் : நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா

ஆண் : அட இன்றைக்கும்
என்றைக்கும் நல்ல
நாள்தான்

ஆண் : கன்னம்மா கன்னம்
தொட்டு சுகம் காட்டம்மா
சின்ன முத்து

பெண் : பூமாலை வெச்சு
புட்டு புது பாட்டெல்லாம்
வெளுத்துக்கட்டு

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும்
காண பெற்றால் மனித பிறவியும்
வேண்டுவதே இம்மானிலத்தே …..
மனித பிறவியும் வேண்டுவதே
இம்மானிலத்தே …… ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : அடி ராக்கம்மா
கைய தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு

ஆண் : அட உன்னப் போல
இங்கு நானும் தான்டி அடி
ஒன்னு சேர இது நேரம்
தான்டி

குழு : { ஜாங்குஜக்கு
சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு
ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு
ஜாங்குஜக்கு ஜா } (2)

ஆண் : அடி ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலைக் கட்டு

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

சுந்தரி கண்ணால்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சுந்தரி கண்ணால்
ஒரு சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக

ஆண் : நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே சுந்தரி
கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள்
நல்ல தேதி

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக

பெண் : வாய் மொழிந்த
வார்த்தை யாவும் காற்றில்
போனால் நியாயமா பாய்
விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா

ஆண் : ஆஆ வாள் பிடித்து
நின்றால் கூட நெஞ்சில்
உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால்
கூட ஜீவன் உன்னை
சேர்ந்திடும்

பெண் : தேனிலவு நான்
வாழ ஏன் இந்த
சோதனை

ஆண் : வான் நிலவை
நீ கேளு கூறும் என்
வேதனை

பெண் : என்னைத்தான்
அன்பே மறந்தாயோ

ஆண் : மறப்பேன் என்றே
நினைத்தாயோ

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக

ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி

பெண் : நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே

ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக

பெண் : சோலையிலும்
முட்கள் தோன்றும் நானும்
நீயும் நீங்கினால் பாலையிலும்
பூக்கள் பூக்கும் நான் உன்
மார்பில் தூங்கினால்

ஆண் : ஆஆ மாதங்களும்
வாரம் ஆகும் நானும் நீயும்
கூடினால் வாரங்களும்
மாதம் ஆகும் பாதை மாறி
ஓடினால்

பெண் : கோடி சுகம்
வாராதோ நீ எனை
தீண்டினால்

ஆண் : காயங்களும்
ஆறாதோ நீ எதிர்
தோன்றினால்

பெண் : உடனே
வந்தால் உயிர்
வாழும்

ஆண் : வருவேன்
அந்நாள் வரக் கூடும்

ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக

ஆண் : நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே

ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக

சின்னத் தாயவள்

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்
தான் நீரோ

பெண் : சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன ரோசாவே

பெண் : பால் மணம்
வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும்
தாய் மனம் ஆயிரம் காலம்
ஊர்வலம் வேண்டிட வந்த
பூச்சரம்

பெண் : வெய்யில்
வீதியில் வாடக்
கூடுமோ தெய்வக்
கோயிலை சென்று
சேருமோ எந்தன்
தேனாறே

பெண் : { சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன
ரோசாவே } (2)

பெண் : சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்
தான் நீரோ சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன
ரோசாவே

காட்டுக்குயிலு

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam, கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { காட்டுக்குயிலு
மனசுக்குள்ள பாட்டுக்
கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான் தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்
கட்டு ஆடத்தான் } (2)

குழு : எல்லோரும்
மொத்தத்திலே சந்தோஷ
தெப்பத்திலே தள்ளாடும்
நேரத்திலே உல்லாச
நெஞ்சத்திலே ஹேய்

ஆண் : காட்டுக்குயிலு
மனசுக்குள்ள பாட்டுக்
கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான் தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்
கட்டு ஆடத்தான்

ஆண் : போடா எல்லாம்
விட்டுத் தள்ளு பழசை
எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ
பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா
டோய்

ஆண் : பயணம் எங்கே
போனால் என்ன பாதை
நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன்
தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா டோய்

ஆண் : ஊத காத்து
வீச உடம்புக்குள்ள
கூச குப்ப கூலம்
பத்தவச்சு காயலாம்

ஆண் : தை பொறக்கும்
நாளை விடியும் நல்ல
வேளை பொங்கப்பாலு
வெள்ளம் போலே பாயலாம்

ஆண் : அச்சு வெல்லம்
பச்சரிசி வெட்டி வெச்ச
செங்கரும்பு அத்தனையும்
தித்திக்கிற நாள் தான்
ஹோய்

ஆண் : காட்டுக்குயிலு
மனசுக்குள்ள பாட்டுக்
கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான் தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்
கட்டு ஆடத்தான்

குழு : எல்லோரும்
மொத்தத்திலே சந்தோஷ
தெப்பத்திலே ஹாஹா

குழு : காட்டுக்குயிலு
மனசுக்குள்ள பாட்டுக்
கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான் தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்
கட்டு ஆடத்தான்

ஆண் : பந்தம் என்ன
சொந்தம் என்ன போனா
என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம்
கவலைப்பட்ட ஜென்மம்
நான் இல்லை ஹாஹா

ஆண் : பாசம் வைக்க
நேசம் வைக்க தோழன்
உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர
உறவுக்காரன்
யாரும் இங்கில்லே

ஆண் : உள்ளம் மட்டும்
நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்

ஆண் : என் நண்பன்
போட்ட சோறு நிதமும்
தின்னேன் பாரு நட்பைக்
கூட கற்பைப்போல
எண்ணுவேன் ஆண் &

குழு : சோகம்
விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி
நாம் தான் ஹேய்

ஆண் : காட்டுக்குயிலு
மனசுக்குள்ள பாட்டுக்
கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான் தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்
கட்டு ஆடத்தான்

குழு : எல்லோரும்
மொத்தத்திலே சந்தோஷ
தெப்பத்திலே தள்ளாடும்
நேரத்திலே உல்லாச
நெஞ்சத்திலே ஹேய்

குழு : காட்டுக்குயிலு
மனசுக்குள்ள பாட்டுக்
கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான் தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்
கட்டு ஆடத்தான்

மார்கழிதான் ஓடிப்போச்சு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா, Chorus
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகார்கள் : ஸ்வர்ணலதா,
எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : மார்கழிதான் ஓடிப்போச்சு
போகியாச்சு ஓ ஹோய்
நாளைக்குத்தான் தை பொறக்கும்
தேதியாச்சு ஓ ஹோய்

குழு : போகியிது போகியிது
நந்தலாலா ஹோ ஹோய்
பொங்க வைப்போம் நாளைக்குத்தான்
நந்தலாலா ஹோ ஹோய்

குழு : வீட்டுல நேத்து வர
கூட்டின குப்பைகள போட்டு
மூட்டையா கட்டி வெச்சு
மூளையில் தீய வெச்சு மூட்டு

குழு : போகட்டும் தீமை எல்லாம்
சேரட்டும் நன்மை எல்லாம் சாமி
பொங்கலோ பொங்கல்னு
பாடட்டும் பாட்டு எடுத்து பூமி

குழு : {தன னா தன நானா
தன நா னா ஹோ ஹோய்} (3)
{தன னா தன நானா
தன னா தன நானா ஹோ ஹோய்} (3)

குழு : மார்கழிதான் ஓடிப்போச்சு
போகியாச்சு ஓ ஹோய்
நாளைக்குத்தான் தை பொறக்கும்
தேதியாச்சு ஓ ஹோய்

குழு : போகியிது போகியிது
நந்தலாலா ஹோ ஹோய்
பொங்க வைப்போம் நாளைக்குத்தான்
நந்தலாலா ஹோ ஹோய்

புத்தம் புது

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : {புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே} (2)

ஆண் : வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ

ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் : பால் நிலா தேய்கின்றதென்று
பகலிரவும் என் நெஞ்சம்
பழி விழுமோ என்றஞ்சும்

பெண் : ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்

ஆண் : கருணைக் கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற

பெண் : பார்வைக் கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற

ஆண் : உயிரென நான் கலந்தேன்

பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

பெண் : வாழ்வெனும் கோலங்கள் இன்று
அறிந்தது உன் பொன் உள்ளம்
நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்

ஆண் : ஈத்திசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் ஞானம்
விடிந்தது நம் செவ்வானம்

பெண் : கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட

ஆண் : தோகை உன்னை நான்தான்
தோளில் இன்று வாங்க

பெண் : உனக்கென நான் பிறந்தேன்

ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் : வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ

பெண் : கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ

பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

யமுனை ஆற்றிலே

பாடகர்கள் : Mitali Banerjee Bhawmik
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : மிட்டலி பானர்ஜி பாவ்மிக் இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

குழு : யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

பெண் : இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….

குழு : இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட….

பெண் : {ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ..ஓ..
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ…} (2)
பாவம் ராதா…

குழு : யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..

பெண் : பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட