Dharmathin Thalaivan

Rajinikanth Dharmathin Thalaivan

முத்தமிழ் கவியே

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : முத்தமிழ் கவியே
வருக முக்கனி சுவையே
வருக முத்தமிழ் கவியே
வருக முக்கனிச் சுவையே
வருக காதலென்னும்
தீவினிலே காலங்கள் நாம்
வாழ நாள் வந்தது

ஆண் : முத்தமிழ் கலையே
வருக முக்கனிச் சுவையும்
தருக காதல் என்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..

பெண் : காதல் தேவன்
மார்பில் ஆடும் பூமாலை
நான் காவல் கொண்ட
மன்னன் நெஞ்சில் நான்
ஆடுவேன்

ஆண் : கண்கள் மீது
ஜாடை நூறு நான்
பார்க்கிறேன் கவிதை
நூறு தானே வந்து
நான் பாடினேன்

பெண் : மூடாத தோட்டத்தில்
ரோஜாக்கள் ஆட
என்னோடு நீ ஆட
ஓடோடி வா

ஆண் : காணாத சொர்க்கங்கள்
நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி
நீ ஓடி வா

பெண் : காலங்கள்
நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..

ஆண் : ஆ.. முத்தமிழ்
கலையே வருக
முக்கனிச் சுவையும்
தருக ஓ

ஆண் : தங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம்
சிந்து

பெண் : நெஞ்சம் எந்தன்
மஞ்சம் அதில் அன்பை
தந்து தந்தோம் தந்தோம்
என்று புது தாளம் சிந்து

ஆண் : வார்த்தைக்குள்
அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை
நீ கொண்டு வா

பெண் : என்றைக்கும்
விளங்காத பல கோடி
இன்பம் யாருக்கும்
தெரியாமல் நீ சொல்ல
வா

ஆண் : காலங்கள்
நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..

பெண் : ஆஆ முத்தமிழ்
கவியே வருக முக்கனி
சுவையே வருக

ஆண் : காதலென்னும்
தீவினிலே காலங்கள் நாம்
வாழ நாள் வந்தது

பெண் : முத்தமிழ்
கவியே வருக முக்கனி
சுவையே வருக

ஆண் : முத்தமிழ்
கலையே வருக முக்கனி
சுவையும் வருக ஓ

ஒத்தடி ஒத்தடி

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், Sunandha
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : சுனந்தா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீல விழி ஓரம்
நிலவே காயும் இசைதான்
இங்கே நதியாய் பாயும்
ரசித்தால் போதும் மடிமேல்
சாயும் பாவை நான்

ஆண் : ஹே ரதரா ஹே
ரதரா ரதரா ரதரா ரதரா
ரதரா ரதரா ஹோய்

ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி
எட்டடி துள்ளினா பத்தடி
பாயுவேன் அம்மாடி

ஆண் : பட்டணம் அறிஞ்ச
போக்கிரி அடி பட்டியம்
தெரிஞ்ச பக்கிரி அட
என்னோட மோதாம
வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு
தான் பாப்போமா

ஆண் : அட வாமா
பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான்
பாப்போமா

ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி

ஆண் : வில்லாதி வில்லனடி
எனக்கு இணையா கில்லாடி
இல்லையடி அட வெச்சாலும்
வெச்சானடி உனக்கு சரியாகத்தான்
மச்சானும் ஒத்த வெடி

ஆண் : சொல்லனும் வந்தனம்
இல்ல மூலையில் குந்தனும்
மக்கு போல் நிக்குற செக்கு
போல் சுத்துற சிக்கலில்
சிக்கலாமா

ஆண் : அட எப்பவும்
துள்ளுற சொப்பன
சுந்தரி இப்படி
முழிக்கலாமா

ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி
எட்டடி துள்ளினா பத்தடி
பாயுவேன் அம்மாடி
வேட்டு தான் போட்டு
தான் பாப்போமா

ஆண் : அட வாமா
பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான்
பாப்போமா

ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி

ஆண் : தெம்மாங்கு பாடட்டுமா
மயிலே ஜதியோடு நான்
தில்லானா ஆடட்டுமா
அட இந்தாடி டப்பாங்குத்து
இதுல பெரிய ஆளு நான்
சும்மா நீ வாய பொத்து

ஆண் : வித்தையா கத்தவன்
அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில்
சொத்தையா சொல்லையா
என்னை நீ என்னலாமா

ஆண் : ஒத்தடி ஒத்தடி
ஓரமா ஒத்தடி அம்மாடி
எட்டடி துள்ளினா பத்தடி
பாயுவேன் அம்மாடி

தென்மதுரை வைகை நதி (Sad)

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், பி. சுசீலா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : பி. சுஷீலா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு } (2)
தேய்கின்றது தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்

ஆண் : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை
நதி

ஆண் : பிள்ளை போல
என்னை இங்கே கையில்
ஏந்தும் தெய்வம் எங்கே
அண்ணன் நல்ல தந்தை
நீயே என்னை காத்து நீ
சென்றாயே

ஆண் : கங்கை போல
கண்ணீர் கொண்டு
மங்கை நீயும் நின்றாய்
இங்கே அன்னை போல
உன்னை பார்த்தேன்
அண்ணி உந்தன் கண்ணீர்
தீர்ப்பேன்

ஆண் : அண்ணன் வழி
நம் பாதை அண்ணன்
மொழி நம் கீதை அண்ணன்
உயிர் நம்மோடு என்றும்
வரும் பின்னோடு நம்
நேசம் பாசம் நாளும்
வாழ்க

ஆண் : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை
நதி

பெண் : { தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு } (2)
தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்

பெண் : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை
நதி

தென்மதுரை வைகை நதி (Happy)

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam, மலேசியா வாசுதேவன், பி. சுசீலா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : பி. சுஷீலா பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு } (2)
தேய்கின்றது தேய்கின்றது
பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்

ஆண் : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி

ஆண் : நம்மை போல
நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும்
இல்லை தன்னை போல
என்னை என்னும் நீயும்
நானும் ஓர் தாய் பிள்ளை

ஆண் : தம்பி உந்தன்
உள்ளம் தானே அண்ணன்
என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம்
எங்கும் ரெண்டாய் மாற
நியாயம் இல்லை

ஆண் : கண்ணோடு தான்
உன் வண்ணம் நெஞ்சோடு
தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்
இந்த நேசம் பாசம்
நாளும் வாழ்க

ஆண் : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி

ஆண் : நெஞ்சில் என்னை
நாளும் வைத்து கொஞ்சும்
வண்ண தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம்
யாவும் கண்ணில் காணும்
காலம் உண்டு

ஆண் : பூவை சூடி
பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே
மானே உள்ளம் தன்னை
கொள்ளை கொண்ட கள்வன்
இங்கு நானே நானே

ஆண் : உன்னோடு தான்
என் ஜீவன் ஒன்றாக்கினான்
நம் தேவன் நீ தானம்மா என்
தாரம் மாறாதம்மா என் நாளும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

ஆண் : { தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு } (2)

பெண் : { தேய்கின்றது
பொன் மாலை நிலா } (2)
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே
வாழும் பாசம்

குழு : தென்மதுரை
வைகை நதி தினம்
பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை
வைகை நதி

வெள்ளிமணி கிண்ணத்தில

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, மனோ, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர்கள் : மனோ, மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்

ஆண் : அடியே ராசாத்தி
சிரிக்காதடி அன்பே என்
நெஞ்ச பறிக்காதடி

பெண் : அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான் கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்

குழு : வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்

ஆண் : பார்த்து பார்த்து
பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே

பெண் : பூவும் பூத்து
பிஞ்சாகித் தான் காயாகி
போனவ நானே

ஆண் : பிஞ்சானதென்ன
காயானதென்ன அஞ்சாமல்
கூறடி நீயும் தான்

பெண் : அப்பாவி மாமா
ஆராய்ச்சி வேணாம்
இப்போது ஏதுங்க நேரம்
தான்

ஆண் : மெய்யோடு நானும்
மெய்யாகச் சேர

பெண் : மேலாடை போல
ஒன்னாக கூட

ஆண் : வரவேண்டும் ஒரு
நேரம் அதச் சொல்லு மானே

ஆண் : அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான்

பெண் : கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்

ஆண் : பாலும் தேனும்
இப்போது தான் ஒன்னாக
சேர்ந்தது இன்று பாசம்
அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த்தது
இன்று

ஆண் : எப்போதும் உன்னை
நீங்காமல் வாழும் நன் நாளை
கேட்பது நானும் தான் குற்றால
காற்றும் சங்கீதம் பாடும் இப்போது
என் மனம் போல தான்

ஆண் : அன்புள்ள நெஞ்சம்
தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே
என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத
ஒரு கேள்வி இல்லை

யாரு யாரு இந்த

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், மனோ
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், மனோ இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : யாரு யாரு இந்த
கிழவன் அட நாறு நாறு
பிஞ்ச தேங்கா நாரு ஆடும்
வயசு எங்களுக்கு கிழவா
கிழவா நீங்க ஆடி தீா்த்த
ஆளு தானே பொதுவா

குழு : ஹான் ஆடும் வயசு
எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீா்த்த ஆளு
தானே பொதுவா

ஆண் : தம்பி தம்பி பொடி
தம்பி தம்பி அங்க அண்ணன்
உண்டு உன்ன நம்பி நம்பி

ஆண் : வாலிபத்தில் கெட்டு
போன தம்பி தம்பி பின்னால்
வாழ்க்கையில் சொல்லி
புட்டேன் வெண்கல கம்பி
டேய்

ஆண் : வாலிபத்தில் கெட்டு
போன தம்பி தம்பி பின்னால்
வாழ்க்கையில் சொல்லி
புட்டேன் வெண்கல கம்பி

ஆண் : உன்னாட்டம் நாடி
தளராத பாடி என்னாட்டம்
எதிலும் நீ முந்தனும்
சொன்னாலே கேளு
வயசான ஆளு பின்னாலே
போய் நீ குந்தணும்

ஆண் : குந்திக்கிறேன் உன்னையும்
குந்த வைப்பான் நீ இந்தக் காலம்
நானோ அந்தக் காலம்

ஆண் : பழைய சங்கதியும்
உங்க அப்பன் பார்த்த சங்கதியும்
எதுக்கு எங்களுக்கு உங்களுக்கு
இளமை எங்கிருக்கு

ஆண் : அட அவுத்து விட்ட
காளையப் போல் அலையக்
கூடாது ஒரு கவுத்த கட்டி
அடக்கி வைக்கும் காலம்
வந்தா என்ன செய்வ

குழு : யாரு யாரு
இந்த கிழவன்

ஆண் : ஹேய்
அட நாரு நாரு
பிஞ்ச தேங்கா
நாரு

ஆண் : ஹான்

ஆண் : ஆடும் வயசு
எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீா்த்த ஆளு
தானே பொதுவா

ஆண் : அம்மாடி பார்த்தா
சரியான தாதா சும்மாவும்
நீங்க அலக்காதீங்க ஹான்

ஆண் : காலேஜ் கிளாஸ்சு
இல்லாமப் போனா கண்ணாடி
கிளாஸா தூக்காதீங்க
கல்லூரிக்கு நாங்க செல்லப்
பிள்ளை கட் அடிச்சா ஒரு
கேள்வி இல்ல

ஆண் : வளத்து விட்டவனும்
உன்ன இங்க படிக்க வச்சவனும்
எத்தனையோ கனவு கண்டிருப்பான்
என்னன்னவோ நினைவு
கொண்டிருப்பான்

ஆண் : அட இளமை இப்போ
இருக்கிறப்போ வெளுத்து
கட்டாம தல நரைக்கிறப்போ
தாடி எடுத்து நடக்கிறப்போ
என்ன செய்ய

ஆண் : யாரு யாரு இந்த
கிழவன் அட நாறு நாறு
பிஞ்ச தேங்கா நாரு ஆடும்
வயசு எங்களுக்கு கிழவா
கிழவா நீங்க ஆடி தீா்த்த
ஆளு தானே பொதுவா
ஹான்

குழு : ஆடும் வயசு
எங்களுக்கு கிழவா கிழவா
நீங்க ஆடி தீா்த்த ஆளு
தானே பொதுவா

ஆண் : தம்பி தம்பி பொடி
தம்பி தம்பி அங்க அண்ணன்
உண்டு உன்ன நம்பி நம்பி

ஆண் : வாலிபத்தில் கெட்டு
போன தம்பி தம்பி பின்னால்
வாழ்க்கையில் சொல்லி
புட்டேன் வெண்கல கம்பி
டேய்

ஆண் : வாலிபத்தில் கெட்டு
போன தம்பி தம்பி பின்னால்
வாழ்க்கையில் சொல்லி
புட்டேன் வெண்கல கம்பி

ஆண் : ஹான் தம்பி தம்பி பொடி
தம்பி தம்பி அங்க அண்ணன்
உண்டு உன்ன நம்பி நம்பி
டேய்